<$BlogRSDURL$>

Wednesday, September 01, 2004

முதலாமாண்டு மண நிறைவு நாளில் ( ஆகஸ்ட் 31) தந்தையின் வாழ்த்துப்பா:

மணமுடித்து ஓராண்டு நிறைவுசெய்யும் செல்வங்காள்!
குணமிணைந்து குறைவின்றி வாழ்கின்ற திலகங்காள்!
நீடுபுகழ் தேடுகல்வி நிறைந்திட்ட நெஞ்சுடையீர்!
நாடுபுகழ் தேடிவர நலமுடன் வாழ்த்துகிறோம்!
இன்பம் நனிசிறக்க இனிமை நலம் சுரக்க
அன்புள்ளம் ஒருசேர அகமகிழ்ந்து வாழ்த்துகிறோம்!

|

This page is powered by Blogger. Isn't yours?